தொல்காப்பியம் – சொல்லதிகாரம் (Tolkāppiyam - Collatikāram)
முதுகலைச் செவ்வியல்தமிழியல் (M.A. Classical Tamil Studies)
TAM 021: தொல்காப்பியம் – சொல்லதிகாரம் (Tolkāppiyam - Collatikāram)
முதன்மைப் பாடம் (CORE COURSE)
பருவம்: 2 பாடநேரம்: 4மணி (வாரம்) புள்ளிகள்: 4
நோக்கங்கள் (Objectives):
தொல்காப்பியச் சொல்லிலக்கண மரபுகளைக் கற்பித்தல் –சொல்லிலக்கண மரபுகளையும், பல்வேறு தொடரமைப்புகளையும் விளக்குதல் –இலக்கணவியலுக்கு இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடனார், பாவலரேறு. ச. பாலசுந்தரம் ஆகிய உரையாசிரியர்களின் பங்களிப்பைக் குறிப்பிடல்– மொழியியல் பின்னணியில் சொல்லிலக்கண மரபுகளை எடுத்துரைத்தல்.
பயன்கள்(Learning Outcomes):
தொல்காப்பியச் சொல்லிலக்கண மரபுகளைக் கற்றல் – உரை மரபுகளை அறிந்து கொள்ளுதல் – தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் இடம்பெறும் கருத்துகளைச் சங்க இலக்கியத்தோடு பொருத்திக் கற்றல் – காலந்தோறும் மொழியில் ஏற்பட்ட மாற்றம் குறித்து அறிதல் – தொல்காப்பியச் சொல்லதிகாரக் கருத்துக்களை மொழியியல் விளக்கங்களோடு உணர்தல்.